Headlines News :

Meenakam News World

Home » , , , , » நாடு கடத்தப்பட்டவர்களுடன் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை

நாடு கடத்தப்பட்டவர்களுடன் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை

Written By Eve on Friday, September 30, 2011 | 1:25 AM

பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என்றும் அத தெரண ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிந்திக் கிடைத்த இன்னொரு தகவலின்படி குறிப்பிட்ட அகதிகளுடன் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10.22 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger