Home »
இளைஞர்
,
ஏற்றியதாகக்
,
காயம்
,
தாக்கி
,
படையினர்
,
புலிக்கொடி
,
மணிநேரம்;
» புலிக்கொடி ஏற்றியதாகக் கூறி 3 மணிநேரம்; படையினர் தாக்கி இளைஞர் காயம்
புலிக்கொடி ஏற்றியதாகக் கூறி 3 மணிநேரம்; படையினர் தாக்கி இளைஞர் காயம்
Written By Eve on Monday, September 5, 2011 | 10:37 PM
கடந்த வருடம் நாரந்தனையில் புலிக்கொடி ஏற்றினாராம் என்ற சந்தேகத்தில் இராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டு 3 மணிநேரம் தாக்கப்பட்ட நாரந்தனை இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.நாரந்தனை வடக்கு, நாரந்தனையைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி கலைவாணன் (வயது 21) என்ற இளைஞரே இராணுவத்தி னரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார் என்று போதனா வைத்தியசாலைப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.கடந்த வருடம் நவம்பர் மாதம் ஊர்காவற்றுறை கரம்பனில் தமிழீழ விடுதலைப்புலி களின் தேசியக் கொடி ஏற்றப்பட்டமை தொடர்பிலேயே இவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார் என்று பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. கடந்த மாதம் 25ஆம் திகதி கரம்பன் இராணுவ முகாமுக்கு இவர் அழைக்கப்பட்டார். இரவு 7 மணிக்கு முகாமுக்குச் சென்ற இவரை 3 மணி நேரமாகத் தடுத்து வைத்துத் தாக்கிய இரா ணுவத்தினர் பின்னர் விடுவித்த னர்” என்று பதிவேடுகளில் கூறப்பட்டுள்ளது.வலி தாங்க முடியாமல் குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். சிகிச்சையின் பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார்.
Labels:
இளைஞர்,
ஏற்றியதாகக்,
காயம்,
தாக்கி,
படையினர்,
புலிக்கொடி,
மணிநேரம்;
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment