Headlines News :

Meenakam News World

Home » , , » சட்டவிரோத கருக்கலைப்பு கிளிநொச்சியில் பெண் சாவு

சட்டவிரோத கருக்கலைப்பு கிளிநொச்சியில் பெண் சாவு

Written By Eve on Thursday, August 11, 2011 | 5:52 AM

சட்டவிரோத கருக்கலைப்பு கிளிநொச்சியில் பெண் சாவு

 கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை பூநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவ்வாறு மரணமாகியுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமானவராவார்.
 
இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger