கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசரமாக அழைத்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, நெதர்லாந்து, ருமேனியா போன்ற நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எனினும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றிய தகவல்கள் எதையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை.
இரண்டு நாள் பயணமாக நேற்று பாகிஸ்தான் புறப்பட முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment