Headlines News :

Meenakam News World

Home » , , , , » வான்படை அதிகாரியின் மனைவியும் மகனும் கடத்தப்பட்டுள்ளனர்

வான்படை அதிகாரியின் மனைவியும் மகனும் கடத்தப்பட்டுள்ளனர்

Written By Eve on Thursday, July 14, 2011 | 10:03 PM

மத்துகம பிரதேசத்தில் வான்படை அதிகாரி ஒருவரின் மனைவியும் மகனும் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து லட்ச ரூபா கப்பம் வழங்குமாறு கோரி குறித்த இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

28 வயதான பெண் ஒருவரும், பத்து வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற சிறுவனை மீள வீட்டுக்கு தாய் அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடத்தல்காரர்கள் தனது மனைவியின் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி மனைவியைக் கொண்டே கப்பத்தை கோரியுள்ளதாக வான்படை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

மீஹாதென்ன மற்றும் மத்துகம ஆகிய காவல் நிலையங்கள் கூட்டாக இணைந்து கடத்தப்பட்டவர்களை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger