அண்மையில் அவர் இலங்கைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்துக் கொண்டமையாலேயே இவ் தடை உத்தரவு வரவுள்ளது.
தமன்னாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரைவுலகின் பல அமைப்புக்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்த அமைப்புகள் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில் படப்பிடிப்புகளுக்காக இலங்கை சென்றால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்று குறித்த அமைப்புகள் தீர்மானம் எடுத்திருந்தன.
இந்த சூழ்நிலையிலேயே ராமசரனின் ராச்சா படப்பிடிப்புக்காக தமன்னா இலங்கை சென்றிருந்தார்.
இதனையடுத்து அவர் நடித்த வேங்கை படத்தை திரையிடுவதில்லை என்று தமிழ் திரைப்படவுலகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதேபோன்ற நிலையை, சல்மான் கானின் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கைக்கு சென்ற அசின் எதிர்நோக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment