Headlines News :

Meenakam News World

Home » , , , , , » செனல் 4 விவகாரம், பிரித்தானிய தமிழருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

செனல் 4 விவகாரம், பிரித்தானிய தமிழருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Written By Eve on Thursday, July 14, 2011 | 2:06 AM

செனல் 4 தொலைக்காட்சிக்கு பிழையான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான இலங்கை தமிழரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தவிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி கண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட கந்தவனம் ஜெகதீஸ்வரன் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செனல் 4 தொலைக்காட்சியின் காணொளியில் இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்கள் காட்டப்பட்டன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger