Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , , » கனேடிய தமிழ் இளைஞர் கொலை - கொலையாளியை அடையாளம் காட்ட 50 ஆயிரம் டொலர் சன்மானம்

கனேடிய தமிழ் இளைஞர் கொலை - கொலையாளியை அடையாளம் காட்ட 50 ஆயிரம் டொலர் சன்மானம்

Written By Eve on Tuesday, July 12, 2011 | 11:29 PM

கனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழரான கிரிஸ்டின் தனபாலன் கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க சன்மானம் வழங்கப்படவுள்ளது.

22 வயதான கிரிஸ்டின் தனபாலன், 2009 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதியன்று கென்னடி வீதியில் உள்ள பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது மற்றும் ஒரு தமிழ் இளைஞர் குழு கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருககும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிரிஸ்டின் தனபாலன் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருந்தனர் எனினும் உண்மையான கொலையாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் உண்மையான கொலையாளியை இனங்காட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் கனேடிய டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று டொரன்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger