ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் மங்கள முனசிங்க குழு, அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முதல் பதவிக் காலத்தில் சாவகட்சிக்குழு என்பன நாடாளுமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையிலேயே அமைந்திருந்தன.
எனினும் அவற்றின் வரைபுகள் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் புதிதாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து சாதிக்க போவது எதுவும் இல்லை. இது காலத்தை கடத்தும் ஒரு வேலைத்திட்டமே என்று எதிர்க்கட்சிகள் கூறுவதாக லக்பிம தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மறுபுறத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுகிறது.
எனவே இது முரண்பாடுகள் நிறைந்த செயற்பாடு என லக்பிம குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அழுத்தம் காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்க்கட்சிகளிடம் திணிக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமையையும் லக்பிம சுட்டிக்காடடியுள்ளது.
No comments:
Post a Comment