சரண்டைந்த பிரபல நடிகையின் கணவர் பிணையில் விடுதலை
பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம இன்று நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத்தினால் 2500 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா தனிநபர் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம்: ஐ.தே.க. குற்றச்சாட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
சஜித்தை கன்னத்தில் அடித்த ரணில்
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் வேளையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை திஸ்ஸ அத்தநாயக்கவிற்கும் பதில் தலைவர் பதவியை கரு ஜயசூர்யாவிற்கும் வழங்கியதன் மூலம் சஜித் பிரேமதாசவிற்கு கன்னத்தில் அறைந்துள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது: மகிந்த இராசபக்சே
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றமுடியாது என சிறீலங்கா சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகின் மிக மோசமான தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று: பிரிட்டன் சஞ்சிகை தெரிவிக்கின்றது
உலகின் மிக மோசமான பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்பதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த எகொனமிஸ்ட் சஞ்சிகை கருத்துத் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் இலங்கைப் பிரதிநிதி கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன மற்றும், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன இரத்தினக்கற்கள் தொடர்பில் சஜித்திடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி டிபி விஜேதுங்கவின் பதவிக் காலத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையின் பெறுமதிமிக்க இரத்தினக்கற்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸவிடம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கோயில்களின் பெயரால் இலட்சக்கணக்கில் மோசடி செய்த மெஜிக் கலைஞர்
நலிந்த நிலையில் இருக்கும் கோயில்களின் முன்னேற்றத்துக்காக மெஜிக் காட்சிகளை ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறி இலட்சக்கணக்கில் ஏமாற்றிய மெஜிக் கலைஞர் ஒருவர் மலைநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிதிப்பலகையில் நின்று பயணிக்க வேண்டாம்
மிதிப்பலகையில் நின்று பயணிக்க வேண்டாம் எனவும் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களிடம் ரயில்வே திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.
நாளை பங்களாதேஷ் இராணுவத் தளபதி சிறீலங்கா செல்கிறார்
5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷின் இராணுவத் தளபதி நாளை இலங்கை செல்கிறார்.
கட்சி செயலாளர்களுடன் தயானந்த திஸாநாயக்க இன்று சந்திப்பு
அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களையும் சந்திக்க தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தீர்மானித்துள்ளார்.
முயல்களுடன் உறங்கிக் கொண்டு நாய்களுடன் வேட்டை: கபே
60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டமை தேர்தல் திணைக்களம் முயல்களுடன் உறங்கிக் கொண்டு நாய்களுடன் வேட்டைக்குப் போகும் செயலாகும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
விரைவில் கல்லாறு மக்களுக்கு கடற்றொழிலில் வாய்ப்பு
கல்லாறு மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற பிரதேசங்கள் கண்ணிவெடிகள் உள்ள பிரதேசங்கள் என்பதனாலேயே தொழில் புரிவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது என முல்லைத்தீவு மாவட்ட சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க் தெரிவித்தார்.
சிறீலங்கா சென்றுள்ள பிரித்தானிய அமைச்சர் எலிஸ்டர் – பசில் சந்திப்பு
சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சர் எலிஸ்டர் பர்ட், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருவருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment