Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » மாதுரு ஓய இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு : இரு படையதிகாரிகள் படுகாயம்

மாதுரு ஓய இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு : இரு படையதிகாரிகள் படுகாயம்

Written By Eve on Wednesday, September 14, 2011 | 11:46 PM

மாதுரு ஓய இராணுவ முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு படையதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆர்.பி.ஜீ ரக குண்டுகளே இவ்வாறு வெடித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

துணை லெப்டினன்கள் இருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.பி.ஜீ. குண்டுகளைக் கொண்டு பயிற்சிகளை நடத்திய போது தவறுதலாக குண்டு வெடித்தத்தில் குறித்த இரண்டு துணை லெப்டினன் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினரும், அரலகங்வில காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger