Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » வடமராட்சியில் பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை

வடமராட்சியில் பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை

Written By Eve on Monday, September 12, 2011 | 1:25 AM

யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி அதிகாலை 5.30மணியளவில் வீட்டிலுள்ள அறையொன்றினுள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டு தன்மேல் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ மூட்டியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவசபாநாதம் மேரிலிடக்ஷனா (வயது16)  எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger