Headlines News :

Meenakam News World

Home » , , , , , » 5 நாட்கள் தொடர் பாலியல்துன்புறுத்தல்: மயங்கி விழுந்த இளம் பெண் வைத்தியசாலையில்

5 நாட்கள் தொடர் பாலியல்துன்புறுத்தல்: மயங்கி விழுந்த இளம் பெண் வைத்தியசாலையில்

Written By Eve on Tuesday, August 9, 2011 | 10:31 AM

5 நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உள்ள பாட்டாக் கடை ஒன்றில் பணிபுரியும் ஆணுக்கும் நாரந்தனை வடக்குப் பகுதியில் வசிக்கும் 19 வயது கொண்ட இளம் பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண்ணை கடந்த ஐந்து நாட்களுக்கு முன் விடுதி ஒன்றில் தங்க வைத்து மேற்படி காதலனால் தொடர் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின் நேற்று வீடு திரும்பிய பெண் மயக்கமுற்று விழவே, அவரது தந்தை அப் பெண்ணை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இம் மயக்க நிலை தொடர்பில் அப் பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை வட்டாரங்கள் உண்மை நிலையை அறிந்து ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே, தான் காதலனால் ஐந்து நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது அப் பெண் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இப் பெண் கடந்த ஐந்து நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அவரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger