தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் நடத்திய போராட்டத்தை குமார் சங்கக்கார பாராட்டியுள்ளதாக, கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி குறித்தோ அல்லது படைவீரர்கள் குறித்தோ சர்வதேச அரங்களில் எந்தவொரு விளையாட்டு வீரரும் சொற்பொழிவாற்றியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குமார் சங்கக்கார படைவீரர்களின் ஆற்றலை பாராட்டி சொற்பொழிவு ஆற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2011 கொலின் கொட்ரி நினைவு சொற்பொழிவில் குமார் சங்கக்கார அண்மையில் உரையாற்றினார்.
இலங்கை கிரிக்கட் துறையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கருத்துக்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சங்கக்காரவின் உரை தொடர்பில் கவனம் செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment