Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » சிறிதரன் பா.உ. தலைமையில் கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரப் பேரணி

சிறிதரன் பா.உ. தலைமையில் கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரப் பேரணி

Written By Eve on Monday, July 11, 2011 | 4:54 AM

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை)  காலை கிளிநொச்சி நகரில் மாபெரும் தேர்தல் பிரசாரப் பேரணியொன்றை நடத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தேர்தல் சின்னமான வீட்டுச்சின்னம் உருவாக்கப்பட்ட ஊர்திகள் சகிதம் மேற்படித்; தேர்தல் பிரசாரப் பேரணி கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து புதியசந்தை வரை நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் கரைச்சிப் பிரதேசசபையில் போட்டியிடவுள்ள 25 வேட்பாளர்களும் கலந்துகொண்டு மக்களுக்குத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் பிரசாரத் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

மேலும் பிரசாரப் பேரணியின்போது பிரதேச மக்களும், வர்த்தகர்களும் வீதிகளில் கூடி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்ப்புக் கொடுத்திருந்தினர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger