Headlines News :

Meenakam News World

Home » , , , , » கூட்டமைப்பு வேட்பாளர்களின் இல்லங்கள் மீது இரவில் கல்வீச்சு

கூட்டமைப்பு வேட்பாளர்களின் இல்லங்கள் மீது இரவில் கல்வீச்சு

Written By Eve on Saturday, July 9, 2011 | 2:25 AM

சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளுக்கு கடந்த சில தினங்களாக இரவு வேளையில் கல்வீச்சு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.சாவகச்சேரி பிரதேச சபையின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை யோகராசாவின் வரணி இயற்றாலை வீட்டின் மீதும் வேட்பாளர் சுந்தரம் என்பவரின் குடமியன் வீட்டின் மீதும் கடந்த 6 ஆம் திகதியும் சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் இ.தேவசகாயம்பிள்ளை என்பவரின் வீட்டின் மீது 7 ம் திகதியும் கற்கள் எறிந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger