இந்த சந்திப்பு தொடர்பான தகவலை குமார் சங்கக்காரவோ அல்லது அமெரிக்கத் தூதரகமோ உறுதிப்படுத்தவில்லை.
இலங்கை கிரிக்கட் துறையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக அண்மையில் லண்டனில் நடைபெற்ற கொலின் க்ரவுட்லி நினைவுப் பேரூரையில் காரசாரமான விரிவுரையொன்றை சங்கக்கார நிகழ்த்தியிருந்தார்.
இந்த உரை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, விளையாட்டு;த்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாட்டின் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்ன விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
No comments:
Post a Comment