Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல மீது பாதுகாப்பு செயலர் கோத்தா பாய்ச்சல்

இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல மீது பாதுகாப்பு செயலர் கோத்தா பாய்ச்சல்

Written By Eve on Tuesday, July 12, 2011 | 7:14 AM

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் கடந்த மூன்று தினங்களாக ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டதின் மூலம் இந்நிகழ்ச்சி பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ள இவரை அனுமதித்தமை மிகப்பெரிய தவறு என்றும் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார்.

இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டு பதிலளிக்க வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், இம்முடிபு குறித்து கோத்தபாய ராஜபக்­ஷ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இராணுவப் பேச்சாளர் அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெதவெலவை இவ்விவாதத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஜனாதிபதி ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷவின் இக்குற்றச்சாட்டுகளால் வெளிவிவகார அமைச்சுக்கும் படைத்துறை அமைச்சுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger