எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி இந்த விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட உள்ள பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment