Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாக தகவல்

நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாக தகவல்

Written By Eve on Friday, July 15, 2011 | 11:02 PM

நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் சட்டவிரோத ஆயுத பயன்பாடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஆயுதங்களை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு போதியளவு கால அவகாசமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கால அவகாசமொன்றை வழங்கி அதன் பின்னர், சட்டவிரோத ஆயதங்களை வைத்திருப்போரை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகிறது.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத அமைப்புக்கள் அதிகளவில் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு சட்டவிரோத ஆயுத பாவனை பெரும் தடையாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் சட்டவிரோத ஆயுத பயன்பாடு அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger