Headlines News :

Meenakam News World

Home » , , , , » வெளிநாட்டுத் கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை

வெளிநாட்டுத் கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை

Written By Eve on Sunday, July 17, 2011 | 3:48 AM

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்ஈடுபடுத்துவது குறித்து இதுவரையில் எந்தவொரு கட்சியும் கோரிக்கை எதனையும்முன்வைக்கவில்லை என தேர்தல் திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென்றால் அதுதொடர்பில் கட்சிகள் எழுத்து மூலம் தேர்தல் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையிலானசந்திப்பின் போதும் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவேமுன்வைக்கப்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புநடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கானவாய்ப்புக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger