2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது.
எழுத்துமூல குறிப்புகளில்லாமல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனையளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள்
சிறீலங்காவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்வண்டிச் சேவை வழமைக்கு திரும்பியது
தொடர்வண்டி சமிக்ஞை கட்டுப்பாட்டுப் பொறுப்பாளர்கள் மற்றும் தொடர்வண்டி கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட வேலை நிறுத்தம் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலையீட்டால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
யாழ் ஆசிரியரை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பாடசாலை ஆசிரியரான திரு.சம்பந்தன் சக்திதரன் (28 வயது) குரூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு இன்று கேட்டுள்ளது.
உரமூட்டையில் ஆணின் சடலம் மீட்பு
கேகாலை பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலை அடுத்து கொழும்பு கண்டி பிரதான வீதியின் 64ஆவது கட்டை பிரதேசத்தில் உர பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குளிர் மூக்குக்கண்ணாடி அணியுமாறு யாழ் மக்களுக்கு அறிவுறுத்தல்
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு கண் தெற்று நோய் பரவுவதாக யாழ். போதன வைத்தியசாலையின் கண்சிகிச்சைப்பிரிவு வைத்திய அதிகாரி எஸ். குகதாஸ் இன்று தெரிவித்துள்ளார்.
80 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
தனமல்வில சூரியஆர பிரதேசத்தில் 80 கிலோ கிராம் கங்சாவுடன் இருவர் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயதுச் சிறுவனை துவக்கால் சுட்ட பொலிசார்: அதிர்ச்சிக் காணொளி
தாயார் முன்னிலையில் 14 வயதுச் சிறுவனை 3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன.
No comments:
Post a Comment