இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அந்தந்த அலுவலகங்களில் அத்தாட்சிப்படுத்தப்படும் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. மேலும் »
சிறிலங்கா வந்துள்ள வங்களாதேச இராணுவ குழு வடபகுதிக்கு விஜயம்
சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வங்களாதேச உயர்மட்ட இராணுவ குழு இன்று வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உயர்மட்ட இராணுவ குழு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள வங்காளதேஷ் தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம் – ஆதரவை விலக்க ஆயத்தமாகும் இந்தியா மற்றும் சீனா
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒருவரையறைக்கு அப்பால் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா, சீனா உட்பட சிறிலங்காவுக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகை பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
No comments:
Post a Comment