அனைத்துப் பல்கலைக்கழகங்களில் நிலவும் ஊழியர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் இன்று நண்பகல் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆர்பாட்டத்தின் போது ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு அரசு உடன் பதில் கூறவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டகாரர்கள் முன்வைத்தனர்.
அத்தோடு “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்வதில் தாமதம் என்?” “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்” போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணிநேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்காணோர் பங்குகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment