Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி இளம் பெண் தீக்குளித்து இறந்தார் .

மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி இளம் பெண் தீக்குளித்து இறந்தார் .

Written By Eve on Sunday, August 28, 2011 | 10:10 AM

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27).   இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.இன்று மாலை இவர்,   காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  பேரறிவாளன், முருகன், சாந்தன்

தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி.  இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger