நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உட னடியாக இடை நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன. இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
home
Home »
அத்திபாரம்
,
ஓடுகள்;
,
குழியில்
,
நெடுந்தீவில்
,
மண்டை
,
வெட்டியபோது
,
வெளிவந்தன
» நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள்; அத்திபாரம் வெட்டியபோது வெளிவந்தன
நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள்; அத்திபாரம் வெட்டியபோது வெளிவந்தன
Written By Eve on Saturday, August 27, 2011 | 12:38 AM
Labels:
அத்திபாரம்,
ஓடுகள்;,
குழியில்,
நெடுந்தீவில்,
மண்டை,
வெட்டியபோது,
வெளிவந்தன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment