Headlines News :

Meenakam News World

Home » , , , , » இன்று இரகசியமாக மகிந்த ஊர்காவற்துறைக்கு சென்றார்

இன்று இரகசியமாக மகிந்த ஊர்காவற்துறைக்கு சென்றார்

Written By Eve on Monday, July 18, 2011 | 10:36 AM

ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக ஊர்காவற்துறைக்கு திடீர் என இன்று நண்பகலுக்கு பின்னர் சென்றுள்ளார். அவர் நாளையே யாழ்ப்பாணம் செல்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முன் அறிவிப்பு எதுவும் இன்றி இன்று ஊர்காவற்துறை பகுதிக்கு சென்ற அவர் அங்கு தேர்தல் தொடர்பாக கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அதன் பின்னர் ஊர்காவற்துறையில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

இன்று காலையில் இருந்தே ஊர்காவற்துறை மற்றும் தீவுப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த பகுதிக்கு மேலும் பல அமைச்சர்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger