வௌ்ளைக்கொடி விவகார வழக்கு மீதான வீடியோ சாட்சி பெறல் இன்றும் தொடரவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையையே அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது.
வட மாகாண சபை அலுவலகங்களை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. திருமலை, வரோதயர் நகரில் இது வரை காலம் இயங்கி வந்த இந்த அலுவலகங்களே யாழ். நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் வீசி வருகிறது. நேற்று குளிர் உச்சகட்ட அளவில் இருந்தது. அனைத்து பகுதிகளிலும் 5 டிகிரிக்கும் குறைவாகவே வெப்ப நிலை இருந்தது. உத்தரபிரதேசத்தில் வெப்ப நிலை 3.4 டிகிரி யாக இருந்தது.
பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் ...
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் மலேசிய பல்கலைக்கழகங்களில் காணப்படுவதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் ஹிசாமுதின் ஹூசைன் தெரிவித்துள்ளளார்.
வடக்கிலிருந்து பொலிஸ் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் 336 பேர் இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொபெய்கனே வித்திக்குலிய பகுதியில் 15 வயது சிறுமி நேற்று மாலை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொபய்கென் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலாமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ...
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். தனது கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது தாயார் விஜயலட்சுமி புலிவெந்தலா ...
ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தனி மாநிலம் அமைப்பது பற்றிய ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை விவரம் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சரத் பொன்சேகா மீதான வௌ்ளைக் கொடி விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலத்தில் அதிகரித்துள்ள கடத்தல்கள், காணாமல் போதல், களவுகள், கொள்ளைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நீர்தேங்கி மீது ஏறி நின்று போராட்டம் நடத்தும் மாணவரின் உயிருக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரே பொறுப்புக் கூற வேண்டுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரின் பகுதியான புளியந்தீவில் நேற்று மட்டக்களப்பு நகரசபையின் பொதுச் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போது பொது மக்கள் பாவனைக்குதவாத 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை மடிப்பாக்கம் பாளையக்காட் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். என்ஜினீயர். இவரது மகன் மோனேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை யில் அருகில் உள்ள கடைக்கு பேனா வாங்குவதற்காக மோனேஷ் ...
எதிர்பார்த்த நிலைமைகளுக்கு மாறான ஒரு யாதார்த்தத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைமைகள் மாறியுள்ளதால், அது குறித்த எனது உரையை இங்கே சிறப்புக் கவன ஈர்ப்புக்கு உட்படுத்த விரும்புகிறேன்.
No comments:
Post a Comment