Home »
» மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.
[ஒலி] தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை.
[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை சிறீலங்காவில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒவ்வொரு தீபம்
ஏற்றும் போதும் சொட்டும்
ஒவ்வொரு சொட்டுக்
கண்ணீரிலிருந்தும் -
முளைக்கட்டும் எம் ஈழ தேசம்!
தென்னிலங்கையின் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகற்பவியல் அகழ்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிமுக தலைவர் வை.கோ. அவர்கள் தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி.
தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன. முன் எப்போதையும் விட இந்த ஆண்டின் மாவீரர் நாள் வெளிப்படையான பல காரணங்களுக்காக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் தினத்தை நாளை புதிய தமிழகம் கட்சி மாவீரன் பிரபாகரன் தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
"பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.
நேற்று முன்தினம் இரவு புத்தளம் பாலாவியா பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மூவர் அங்கிருந்த 11 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு புகுந்த அம்மூவரும் சிறுமியின் தகப்பனாரையும், அம்மம்மாவையும் கட்டிப்போட்டுவிட்டு இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில சிறீலங்கா ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியா தடுப்பு முகாம்களிலுள்ள யாழ் குடாநாடு மக்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டு விட்டார்கள் என அண்மையில் அரச அதிபர் கணேஷ் அறிவித்திருந்தார். ஆனால் உண்மையில் குடாநாட்டு மக்கள் இப்போதும் அழைத்துவரப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ்த்தாயின் உயிர் மகனே..
சீர் ஓங்கும் நீலக்கடலும் வாவியும் சேர்ந்திளங்கும்
தமிழீழத்தின் வல்வெட்டி துறையியினிலே வந்து உதித்த நாயகனே..
உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு
நீ மட்டுமே - தமிழர்களை தலைவனாக்க
தலைவனானாய்;
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டிருந்தால் அவருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய அணிகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.
மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
No comments:
Post a Comment