யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு முன்னாள் யுவதி ஒருவரை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி தீ மூட்டி கொளுத்தியுள்ளார்.பாடசாலையில் கல்வி கற்கும் உறவினரின் பிள்ளையை அழைத்து வருவதற்காக இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடசாலைக்கு குறித்த யுவதி சென்றுள்ளார். இதன் போது அங்கு வந்த இளைஞன் அருகில் இருந்த கடையில் உள்ள கத்தியை எடுத்து யுவதியின் வயிற்றில் குத்தியுள்ளதோடு கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதனையடுத்து நிலத்தில் வீழ்ந்த யுவதியை தான் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி தீயிட்டு கொழுத்தி தானும் அந்த உடல் மீது வீழ்ந்து எறிந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment